Thursday, November 6, 2014

Three Days (Korean TV series) - ஒரு தமிழ்நாட்டு அரசியல் கதை


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இன்றைக்கு இப்படியான ஒரு கண்ணோட்டத்தில பாக்குற அனுதாபிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

எப்படியென்றால் தன்னுடைய அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில செய்த தவறுகளை இன்று அவர் திருத்திக்கொண்டு பிராயச்சித்தம் தேடுகிறார். அதேவேளை ஆரம்ப காலம் தொட்டு அவரை சுற்றி இருந்து அவரை தவறு செய்ய தூண்டிய மாபியா இன்று தம்முடைய ஆதிக்கத்தில் இருந்து அவர் விடுபட்டு அந்த மாபியாவுக்கே எதிரா திரும்பின தருணங்களை தாங்க முடியாம அவரை விழுத்தியதாக கூறுகிறார்கள். அவர் மக்களுக்காக போராடுவதாகவும் கூறுகிறார்கள்.

அச்சொட்டா அதே கதைதான் இது. ஜெயலலிதாக்கு பதிலாக தென்கொரியாவின் ஜனாதிபதி.



அமெரிக்கன் 24 TV series  அதே போல நேரத்தை குறிப்பிட்டுச் செல்லுற ஒரு அரசியல் த்ரில்லர். மொத்தம் 3 பகுதி ஒவ்வொரு பகுதியும் 72 மணித்தியாலத்தை குறிக்கும். 16 எபிசோட்ல முடியுற தொடர். ஒவ்வொன்றும்  1 மணிநேரம்.


சர்வதேச ஆயுதவியாபாரம் எப்படி உண்மையாக நடைபெறுதோ அந்த அசிங்கத்தை அப்படியே காட்டி இருப்பர்கள். உயிர்காக்கும் மருந்து என்றாலும் சரி உயிரைகுடிக்கிற ஆயுதம் என்றாலும் சரி அமெரிக்கா ஒவ்வொரு நாட்டுலயும் விற்பதற்கு கையாளுற உத்தி ஒன்றுதான். நோயை உருவாக்கி மருந்தை விற்பது, சண்டையை உருவாக்கி ஆயுதத்தை விற்பது.

வடகொரிய கெரில்லாக்கு பணம் கொடுத்து தென்கொரியா மீது ஒரு சாதுவான தாக்குதல் முயற்சி போல காட்டி தென்கொரியாவை ஆயுதம் வாங்க நிர்ப்பந்திக்கும் படி யோசனை சொல்லுறார் அந்த நேரம் அமெரிக்க ஆயுத கம்பனி ஏஜண்ட்டா இருந்த லீ-டொங்-வீ. தாக்குதலின் தாக்கத்தை அதிகரிக்க அதை ஒரு பெரிய படுகொலையா நடத்தி எல்லாரையும் அதிர வைக்குறான்   சைக்கோ தென்கொரிய தொழிலதிபன் கிம்-டோ-ஜின்.

குற்றவுணர்வால பாதிக்கப்பட்ட லீ-டொங்-வீ  தான் பண்ணின தப்ப சரி பண்ண ஜனாதிபதியா வந்து தன்னோட சேர்ந்து சதி செய்த அத்தனை பேரையும் கூண்டேத்துறதுதான் கதை.

இந்த கதைதான் அடிப்படை. ஆனா தொடர் முழுக்க ஒன்மேன் ஆர்மியாக போராடி ஜெயிக்கிறது ஒரு நேர்மையான உளவுப்பிரிவு ஆசாமி ஹான்-டே-யுன். உதவிக்கு ஒரு உளவுப்படை பெண்ணும் ஒரு பொலிஸ் பெண்ணும்.

ஹான் - டே - யுன் கரெக்டர் எல்லாரும் பல படங்கள்ல பல காமிக்ஸ்கள்ல பார்த்த கரெக்டர்தான். ஓரளவுக்கு இரத்தபடலம் ஏஜெண்ட் XIII உடன் ஒப்பிடலாம்.



பெரிய பட்ஜெட்டில எடுத்திருக்கிறதால பிரமாண்டத்துக்கு பஞ்சமே இருக்காது. கொரியாவினுடைய அதீதமான திறந்த பொருளாதாரக் கொள்கையை படம் விமர்சிக்க தவறவில்லை. வில்லன் வரும்போது பின்னணில டெரரா எல்லாம் மியூசிக் போட்டு சாவடிக்காம அவன்ட செயல்பாட்டில அவன்ட மிருகத்தன்மையை காட்டி இருக்கிறது கொரிய சினிமா மட்டுமில்ல தொலைக்காட்சி தொடர்கள் கூட சரியான பாதையில பயணிக்கிறதை காட்டுது. 




ஒவ்வொரு அதிகாரிகளினது வாழ்க்கை பூரா கட்டிகாப்பாத்தின நேர்மை ஒரு தவறான முடிவோட கேள்விக்குறியாறது மட்டுமில்லாது காலம் முழுக்க பயந்து நடுங்கி மீள முடியாத ஊழல் வளையத்தில சிக்கவேண்டி இருக்கிறதை இதில வடிவா பார்க்கலாம்.

செத்தா எப்படி செத்தான் என்றும் சொல்லமாட்டார்கள், சமயத்தில உடலையும் கொடுக்க மாட்டார்கள், உயரதிகாரிகளை காப்பாற்ற துரோகிப்பட்டமும் திடீரென கிடைக்கும், நேற்றுமட்டும் உற்ற நண்பனா சக ஊழியனா இருந்தவனை இன்று கொல்லவேண்டிய பணி கிடைக்கும். இப்படிப்பட்ட நரகசீவியத்தை உளவு அதிகாரிகள் எப்படி வாழ்கிறார்கள் என்று இந்த தொடர்ல காணலாம். 


சிக்கல் என்னவென்றால் பார்க்கதொடங்கும் முன் 16 மணித்தியாலத்தையும் ஒதுக்கி வைத்துக்கொண்டு சாப்பாடு , டீ/காபி எல்லாம் தயாரா வைச்சுட்டு பார்க்க வேண்டும். எபிசோடுக்கு ஒரு ட்விஸ்ட் நிச்சயம் வரும். ஊகிக்கமுடியாத திரைக்கதை. வெறும் 16 மணித்தியால தொடருக்கு திரைக்கதை எழுத கிம்- யுன்- ஈ க்கு 2 வருடத்திற்கு மேல் தேவைப்பட்டிருக்கு என்பதில் இருந்து இதற்கு பின்னணியில் உள்ள உழைப்பை புரிந்து கொள்ளலாம்.






No comments:

Post a Comment